பணம் எடுக்க உதவுவது போல் ரூ.56,000 கொள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுபதற்கான வழிமுறைகள் தெரியாததால் அவ்வழியே சென்ற இளைஞரிடம் பணம் எடுத்துத் தருமாறு கேட்டுள்ளார். அந்த இளைஞரும் அவருக்கு உதவுவது போல் அவரின் நான்கு இலக்க ரகசிய எண்ணை கேட்டறிந்து பதிவிட்டு உங்களது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என கூறி கலைச்செல்வியை ஏமாற்றி அவரிடம் போலியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு உண்மையான கார்டை எடுத்துச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் கலைச்செல்வியின் தொலைபேசிக்கு தங்களது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.56,000 எடுக்கப்பட்டுள்ளதாக குறுச்செய்து வந்துள்ளது. இதையடுத்து பதறிபோன அவர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்த நிலையில், அந்த மர்ம நபர் எந்தெந்த ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :