காதல் மனைவியுடன் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய கணவன்

by Staff / 28-12-2022 05:07:10pm
காதல் மனைவியுடன் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய கணவன்

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகே திருமணம் முடிந்து இரு மாதங்களேயான கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணைதூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், தருவைகுளம் AM பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமுனியசாமி (26), தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். மனைவி சீதாசெல்வி (24), அருகில் உள்ள துவரந்தை கிராமத்தை சேர்ந்தவர், இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர்.பின்னர், இருவருக்கும் இடையே லேசான தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.அப்போது இருவரும் ஒரேகயிற்றில் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்தருவைகுளம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைபற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, தூத்துக்குடி சப்-கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.புது மண தம்பதியினர் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
 

 

Tags :

Share via