2 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

by Editor / 14-08-2021 07:43:06pm
2 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

ஆந்திராவில் பெண் ஒருவர் தனது இரண்டரை வயது மகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனந்தபூர் மாவட்டம் தர்மவரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு (35) மீனாட்சி (29) தம்பதிக்கு தனுஸ்ரீ (6), பிரணீதா(2) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஸ்ரீனிவாசுலு வேலைக்கு சென்றிருந்தார்.


மூத்த மகள் தனுஸ்ரீ தனது தாத்தாவின் வீட்டிற்குச் சென்றாள். மீனாட்சியும் பிரணீதாவும் வீட்டில் இருந்தனர். இந்நிலையில் மீனாட்சி முதலில் தன் மகளின் கையை அறுத்து, அடுத்து தன் கையை அறுத்து, பின்னர் தூக்கிட்டுக்கொண்டார்.


அதற்கு முன்பு பணப்பிரச்னை தொடர்பாக கணவன்,மனைவி வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது . கதவு நீண்ட நேரம் மூடியிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தை ப்ரணீதா இறந்து கிடந்த நிலையில், மீனாட்சி அனந்தபூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மகளை கொலை செய்ததற்காகவும் தற்கொலை முயற்சிகாகவும் மீனாட்சி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via