சைலேந்திரபாபு பெயர் மீண்டும் பரிந்துரை

by Staff / 31-08-2023 02:10:34pm
சைலேந்திரபாபு பெயர் மீண்டும் பரிந்துரை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயர் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாமல் நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, கோப்புகளை அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்தை குறிப்பிட்டு மீண்டும் கோப்புகளை அனுப்பி வைத்துள்ளது. இந்த முறை ஆளுநர் ஒப்புதல் தருவாரா என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது டிஜிபி, தலைமை செயலாளர் ஆகியோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் டி.என்.பி.எஸ்.சி.,க்கு தமிழர் ஒருவரை நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

 

Tags :

Share via