சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் மனோ தங்கராஜ்

by Staff / 03-02-2023 04:33:52pm
சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் மனோ தங்கராஜ்

மறைந்த முதல்வர் அண்ணாவின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மையங்களிலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகளை துவக்கி வைப்பதற்காக தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அண்ணா விளையாட்டரங்குக்கு வந்தார். அப்போது, போட்டிகளைத் துவக்கி வைக்கும் முன்னர் அவர் ஏற்கனவே சிலம்ப கலையில் ஈடுபாடு உள்ளவர் என்பதால், சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை அசத்தினார்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், சுற்றுச்சூழல் மற்றும் உணவு பழக்கங்கள் மாறிவிட்ட நிலையில் மனிதன் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரும் நிலை உள்ளதால் அனைவரும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.இதையடுத்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மாநகராட்சி ஆணையர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo