வைகையாற்று தரைப்பாலத்தில் பையில் பிறந்த சில மணிநேரமே ஆன பெண் சிசு உடல்மீட்பு - 

by Editor / 20-09-2024 11:40:05pm
வைகையாற்று தரைப்பாலத்தில் பையில் பிறந்த சில மணிநேரமே ஆன பெண் சிசு உடல்மீட்பு - 

மதுரை மாநகர் வைகையாற்றுப்பகுதியில் உள்ள யானைக்கல் தரைப்பாலத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு  ஒன்று குப்பை  கவரில் கிடந்துள்ளது. 

இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் குப்பை கவரில் குழந்தை இருப்பது பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லூர் காவல்துறையினர் பச்சிளங்குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகிலுள்ள யானைக்கல் தரைப்பாலத்தில் பெண் பச்சிளம் குழந்தை குப்பை கவரில் மீட்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் பெண் குழந்தையின் தொப்புளில் மருத்துவமனையில் பொருத்தப்படும் தொப்புள் கொடியின் கருவியும் இருந்த நிலையில் பெண் சிசுக்கொலை நடைபெற்றுள்ளதா இல்லை வேறு ஏதேனும் பகுதிகளில் இருந்து பிறந்த குழந்தைகளை கொலை செய்து தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளார்களா? என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் 

யானைக்கல் தரைப்பாலத்தில் ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பெண் சிசு குப்பை கவரில் வீசி செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிசுவின் தொப்புள்கொடியில் கருவி இருப்பதால் மருத்துவமனையில் குழந்தை பிறந்த பின் வீசி சென்றது உறுதியாகியுள்ள நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பேருக்காக அனுமதிக்கப்பட்டது தொடர்பான விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

 

Tags : வைகையாற்று தரைப்பாலத்தில் பையில் பிறந்த சில மணிநேரமே ஆன பெண் சிசு உடல்மீட்பு - 

Share via