144 தடை உத்தரவு சிவகங்கையில்

by Staff / 22-10-2022 05:05:36pm
 144 தடை உத்தரவு சிவகங்கையில்

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில். ஆங்கிலயேரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தையொட்டி காளையார்கோயிலில் நடைபெறும் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜையை தினத்தையொட்டி நாளை முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via