நான்கு குழந்தைகள் உட்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்

by Staff / 21-10-2023 01:59:43pm
நான்கு குழந்தைகள் உட்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றும் 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனிவார்டில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

 

Tags :

Share via