திருநெல்வேலி ரயில் நாரைக்கிணரில் நின்று செல்லும்
தூத்துக்குடி - திருநெல்வேலி - தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களுக்கு வாஞ்சி மணியாச்சி அருகே உள்ள நாரைக்கிணர் ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்படவில்லை. பயணிகளின் வசதிக்காக செப்டம்பர் 1 முதல் நாரைக்கிணர் ரயில் நிலையத்தில் தூத்துக்குடி - திருநெல்வேலி - தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் நின்று செல்லும். அதன்படி தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06667) மற்றும் திருநெல்வேலி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06668) ஆகியவை நாரைக்கிணர் ரயில் நிலையத்தில் இருந்து முறையே இரவு 07.15 மணிக்கும், காலை 08.00 மணிக்கும் புறப்படும்.
Tags :