கடையநல்லூரில் மோடி பேனரை அசிங்கப்படுத்திய நபரை கைது செய்ய புகார் மனு
கடையநல்லூரில் பிரதமர் மோடி மற்றும் தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் பேனரை அசிங்கப்படுத்திய நபரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
கடையநல்லூரில் தமிழக பாஜக தலைவராக இருந்த முருகனை மத்திய இணை அமைச்சராக நியமனம் செய்ததற்கும் அண்ணாமலையை மாநிலத் தலைவராக நியமனம் செய்ததற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடையநல்லூர் பாஜக சார்பில் தேசிய நெடுஞ்சாலை பிஎஸ்என்எல் அருகே டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த டிஜிட்டல் பேனரை அசிங்கப்படுத்தியதாக கூறி சம்பந்தப்பட்ட நபரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக தொண்டர்கள் பிஎஸ்என்எல் அருகே கூடினர் பின்னர் நகர பாஜக பொறுப்பாளர் மாரி கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Tags :