பசையை ஊற்றி கள்ளக்காதலர்களை கொடூரகொலை செய்த மந்திரவாதி
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே கேலபாவடி என்ற இடத்தில் தம்பதி ஒன்று கொலை செய்யப்பட்டு கடந்த 18ம் தேதி நிர்வாணமாக கிடந்தனர். இதுகுறித்த விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த பாலேஷ் குமார் என்ற மந்திரவாதி தான் அந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் இறந்தவர்களின் பெயர் மீனா, சோனு என்றும், இருவரும் முறை தவறிய உறவில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அவர்கள் அங்குள்ள கோயிலுக்கு அடிக்கடி வந்ததாகவும், இதை அறிந்த ராகுலின் மனைவி மந்திரவாதியிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களை கொலை செய்ய கருதிய பாலேஷ், சூப்பர் குளூ என்ற பசையை வாங்கி வந்து, சடங்கு என கூறி இருவரையும் உடலுறவு செய்ய கூறியுள்ளார். பின் அவர்கள் உடலுறவில் இருந்தபோது தான் கொண்டு வந்த பசையை அவர்கள் மீது கொட்டியுள்ளார். இதில் இருவரது உடலும் ஒட்டிக்கொண்டதால் பிரிக்க முடியவில்லை.
பின் இருவரையும் இழுத்து அவர்களது அந்தரங்க உறுப்பை பிய்த்து, இருவரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார். பின் போலீசார் விசாரணையில் சிசிடிவி மூலம் மாட்டிக்கொண்டார்.
Tags :