மனைவி தொல்லையால் புது மாப்பிள்ளை தற்கொலை

by Staff / 15-12-2022 12:01:06pm
மனைவி தொல்லையால் புது மாப்பிள்ளை தற்கொலை


பெங்களூரு உல்லாலா எம்வி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரா (25) என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கவானா என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு மகேஸ்வரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், கவானா தனது கணவருடன் அடிக்கடி தகராறு செய்ததாகவும், அவரது துன்புறுத்தல் காரணமாக மகேஸ்வரா தற்கொலை செய்து கொண்டதாகவும் இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

 

Tags :

Share via