சாலை விபத்து.. 8 பேர் பலி

by Staff / 09-04-2024 01:48:02pm
சாலை விபத்து.. 8 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு பயங்கர விபத்து நடந்தது. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பொலிரோ வாகனம் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த 10 பேரில் 8 பேர் உயிரிழந்தனர். இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via