காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண்
ஆந்திரா மாநிலத்தில் உள்ள தடிபாகா பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் குடப்பள்ளியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் இருந்துள்ளார். இம்மாதம் 17ம் தேதி இரவு அந்த பெண்ணின் வீட்டுக்கு அவரது காதலன் வந்துள்ளார். அவர்கள் நெருக்கமாக இருந்தபோது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் வேறொரு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டது, அந்த பெண்ணுக்கு தெரிய வந்ததையடுத்து ஆத்திரமடைந்த திருமணமான பெண், காதலனின் பிறப்புறுப்பை பிளேடால் வெட்டியுள்ளார்.பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக அங்கிருந்து ராஜோலு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததை அடுத்து அவர் குணமடைந்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவரை தாக்கிய திருமணமான பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags :