தமிழகம் முழுவதும்  வரும்  4ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கம்.

by Editor / 02-01-2023 10:11:00pm
தமிழகம் முழுவதும்  வரும்  4ம் தேதி  போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம்  தொடங்கம்.

தமிழகம் முழுவதும்  போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் வரும் 4ம் தேதி தொடங்கப்படும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.தமிழகத்தில் கடந்த 18 வருடங்களாகவே போலியோ இல்லாத நிலைமை உள்ளது. போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 4ம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : polio

Share via