திருமணமாகாத சோகத்தில் வாலிபர் தற்கொலை.
கோவை ரத்தினபுரி அருகே உள்ள வ. உ. சி. வீதியை சேர்ந்தவர் அசோக்குமார்(28). திருமணமாகவில்லை. கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வார்டு பாயாக வேலை பார்த்து வந்தார். இவர் தனக்கு திருமணமாகததால் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்றுவேலை முடிந்து வீட்டுக்கு சென்ற அசோக்குமார் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு
தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :