மாணவியிடம் தவறாக நடந்ததாக ஆசிரியர் மீது புகார்

by Staff / 13-03-2023 02:31:07pm
மாணவியிடம் தவறாக நடந்ததாக ஆசிரியர் மீது புகார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் கணக்கு ஆசிரியர் சரவணன் என்பவர், பள்ளி மாணவியிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via