3 பேர் கொலை வழக்கில் கைதான 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
திருநெல்வேலி அருகே நிலத்தகராறில் பெண் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே நாஞ்சான்குளத்தில் ஏப்.17ல் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். வழக்கில் அவர்களது உறவினரான பா.ஜ., பிரமுகர் அழகர்சாமி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு அழகர்சாமி 56, மகன்கள் ராஜா மணிகண்டன் 24, ராஜா சுந்தரபாண்டி 26, மருமகன் செந்தூர்குமார் ஆகியோர் திருநெல்வேலி மத்திய சிறையிலும் அழகர்சாமியின் மனைவி பேச்சியம்மாள் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
Tags : 5 arrested in 3 murder case arrested under thuggery law.