லாரி மீது ஏறி அமர்ந்து மது அருந்திய வாலிபர் போதையில் கீழே விழுந்து உயிரிழப்பு

by Staff / 16-05-2022 05:21:19pm
லாரி மீது ஏறி அமர்ந்து மது அருந்திய வாலிபர் போதையில் கீழே விழுந்து உயிரிழப்பு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் ஏற்றிவந்த லாரி மீது அமர்ந்து மது அருந்திய வாலிபர் போதையில் கீழே விழுந்து உயிரிழந்தது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்காயம் ஏற்றி வந்த லாரியில் கிளீனராக பணியாற்றும் ராஜ் என்பவர் அந்த வாகனத்தின் மேல் அமர்ந்து தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது அதிலிருந்து பின்னால் நகர்ந்து அவர் போதையில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via