தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை.
நாகப்பட்டினத்தில் இருந்து ஏராளமான படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்கள் மீது இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு விசைப் படகையும் சிறைபிடித்து வைத்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து நடக்கும் கைது நடவடிக்கு மீனவ மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags : தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை.