வருண் காந்தியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர்

by Editor / 04-10-2021 09:42:01am
வருண் காந்தியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர்

கோட்சே வாழ்க என்று பதிவிடுபவர்களை பொது வெளியில் அவமதிக்கப்பட வேண்டும் என்று வருண் காந்தி கூறியதற்காக அவரை காங்கிரஸின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பாராட்டியுள்ளார்.

காந்தியடிகள் பிறந்த நாளான கடந்த 2ம் தேதியன்று நுாதுராம் கோட்சே வாழ்க என்ற வாசகம் டிவிட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி டிவிட்டரில், ஆன்மீகத்தில் இந்தியா எப்போதும் சிறந்த விளங்கியுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவை மதிப்புமிக்க நாடாக மாற்றியதில் காந்தியடிகளும், அவர் பின்பற்றிய கொள்கைகளுக்கும் முக்கிய பங்கினை கொண்டுள்ளது. கோட்சே வாழ்க என பதிவிடுபவர்கள் பொறுப்பின்றி நாட்டை அவமதித்து வருகின்றனர். இது போன்ற கருத்துக்கள் பொதுவெளியில் அனுமதிக்கப்படக் கூடாது. அப்படி பதிவிடுபவர்கள் பொது வெளியில் அவமதிக்கப்பட வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார்.

கோட்சே வாழ்க என்று பதிவிடுபவர்களை பொது வெளியில் அவமதிக்கப்பட வேண்டும் என்று வருண் காந்தி கூறியதற்காக அவரை காங்கிரஸின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பாராட்டியுள்ளார். சல்மான் குர்ஷித் இது தொடர்பாக கூறியதாவது: இது நாங்கள் நீண்ட காலமாக பராமரிந்து வந்த ஒன்று. இப்போது பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் இதை சொல்கிறார். எனவே அதற்காக அவர் பாராட்டப்பட வேண்டும். அவர் உண்மையை சொல்கிறார் மற்றும் வெளிப்படையாக பெரும் பொறுப்பை ஏற்கிறார். அவர் உண்மையை சொல்கிறார். உண்மையை சொன்னதற்காக அவர் பாராட்டப்பட வேண்டும்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பஞ்சாப் காங்கிரஸ் தலைமை பொருத்தமற்றது என்று ஏன் சொல்கிறார்? நாம் சம்பந்தமில்லாதவர்கள என்றால் நாம ஏன் பொருத்தமற்றவர்கள் என்று சொல்கிறோம். அவர் இதை சொல்ல தேவையில்லை. ஏதோ அவரை தொந்தரவு செய்கிறது. அதனால் தான் அவர் அதை சொல்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via