அண்ணாமலையார் கோயிலில் சிவ லிங்கம் மீது ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது.

by Editor / 14-04-2024 08:37:50am
அண்ணாமலையார் கோயிலில் சிவ லிங்கம் மீது ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிவலிங்கம் மீது சூரிய ஒலி படும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் கிரிவல பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரம் நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிவலிங்கம் அமைந்துள்ள மூலவர் மீது சூரிய ஒலிபடும் அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருநேர் அண்ணாமலையாரையும், சூரிய பகவானையும் வழிபட்டனர்.

 

Tags : திருவண்ணாமலை கிரிவல பாதையில்

Share via