மும்பையில் 22 கோடி மதிப்புள்ள 7 கிலோ ஹெராயின் பறிமுதல்

by Editor / 20-10-2021 11:16:41am
மும்பையில் 22 கோடி மதிப்புள்ள 7 கிலோ ஹெராயின் பறிமுதல்

மும்பையில் உள்ள சியோன் எனும் பகுதியில் இருந்து 7 கிலோ ஹெராயின் எனும் போதைப் பொருளை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 22 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதே போல கடந்த 10 ஆம் தேதி 25.45 கிலோ ஹெராயினை இந்தியாவுக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 5 டன் கச்சா எண்ணெய் கேனில் இந்த போதைப் பொருளை மறைத்து வைத்து கொண்டு வந்ததாகவும், இதை ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானின் சஹஹார் துறைமுகம் வழியாக மும்பையில் உள்ள நவா ஷேவா எனும் துறைமுகத்துக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் தான் குற்றவாளிகளை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via