40 வயதில் 44 குழந்தைகளுக்கு தாயான ஆப்பிரிக்க பெண்
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்த மரியம் நபடான்சிக்கு தனது பெற்றோர் 12 வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர். 13 வயதிலேயே கர்ப்பம் தரித்த இவருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. பிறகு தொடர்ந்து குழந்தைகள் பெற்றெடுத்த மரியத்திற்கு 40 வயதில் 44 குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரே பிரசவத்தில் 5 முறை 3 குழந்தைகளும், 5 முறை 5 குழந்தைகளும், 1 முறை ஒரே குழந்தையும் பிறந்துள்ளது. அதில் 6 குழந்தைகள் உயிரிழந்து விட்டது. 20 சிறுவர்களும், 18 சிறுமிகளும் தற்போது இருக்கிறார்கள்.
Tags :