தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் - அமைச்சர் மா. சுப்ரமணியன்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேரளா, மகாராஷ்ட்டிரா, டெல்லி போன்று மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிமாக உள்ளது. அங்கு இருப்பதைப் போன்று ஒரே நேரத்தில் அதிக பாதிப்புகள் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. இந்த பாதிப்பு உயந்து தினசரி கொரோனா எண்ணிக்கை ஆயிரத்தை தொடும் போது முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்றார்.
Tags :