விசாரணைக்கு ஆஜரான நாம் தமிழர் நிர்வாகிகள்

by Staff / 07-02-2024 12:08:04pm
விசாரணைக்கு ஆஜரான நாம் தமிழர் நிர்வாகிகள்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன் ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். கடந்த 2ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் விடுதலை புலிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.. மேலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யமாட்டோம் எனவும் முறையான விசாரணை மேற்கொள்வோம் என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

 

Tags :

Share via