வெளிநடப்பு செய்தது அப்பட்டமான மரபு மீறல் - கனிமொழி

by Staff / 10-01-2023 03:15:00pm
வெளிநடப்பு செய்தது அப்பட்டமான மரபு மீறல் - கனிமொழி

சட்டமன்றத்தில் இருந்தோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்தோ எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள், ஆனால் இங்கு கவர்னர் வெளிநடப்பு செய்திருக்கிறார் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார். ஆளுநர் எதிர்கட்சியாக செயல்படுகிறார் என்பதையே அவரின் வெளிநடப்பு உணர்த்துகிறது. கவர்னரை தூண்டி விட்டு செயல்படுகிறார்கள். கவர்னரின் வெளிநடப்பு என்பது அப்பட்டமான மரபு மீறல். மத்திய அரசு எழுதி கொடுக்கும் உரையை தான் குடியரசு தலைவர் படிக்கிறார். குடியரசு தலைவர் அதை படிக்காமல் தான் நினைத்ததை படிப்பேன் என்றால் மத்திய அரசு ஒப்புக்கொள்ளுமா? என்றார்.

 

Tags :

Share via