திருமணத்துக்கு சென்ற நபர் கிணற்றில் சடலமாக மீட்பு.

by Staff / 17-03-2023 04:48:47pm
திருமணத்துக்கு சென்ற நபர் கிணற்றில் சடலமாக மீட்பு.

பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி, வீராச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி என்கிற பூவரசன் (45). இவருக்கும், கங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பூவரசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபியில் உள்ள ஒரு உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்வதாக கங்கம்பாளையம் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், கங்கம்பாளையத்தில் உள்ள ஒரு பொதுக் கிணற்றில் பூவரசன் பிணமாக மிதப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மேற்கொண்ட விசாரணையில், பூவரசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, குடி போதையில் இந்த பொதுக்கிணற்றின் திண்டில் அமர்ந்திருந்த நிலையில் தவறி விழுந்து இறந்து விட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via