மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழிலாளி தட்டார்மடம் அருேகயுள்ள நடுவக்குறிச்சி பிரகாசபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சி. சார்லஸ் (வயது 50). தொழிலாளி. இவர் திசையன்விளையில் உள்ள தும்பு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குளோரி (45). இத்தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது. இந்தநிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குளோரி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.ஆனாலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி குளோரி இறந்து போனார். அவர் இறந்த துக்கம் தாங்காமல் சார்லஸ், சோகத்தில் இருந்து வந்துள்ளார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும், அவரால் மனைவியின் இழப்பை மறக்கமுடியாமல் தவித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார், அந்த வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :