கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

by Staff / 16-11-2022 04:15:52pm
கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

குமரி மேற்கு மாவட்டம் நித்திரவிளை அருகே 13 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தரப்பினர் இந்த நிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வேலி அமைத்ததாக தெரிகிறது.இதனை மற்றொரு தரப்பினர் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற குளச்சல் டி. எஸ். பி. தங்கராமன் மற்றும் போலீசார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் வேலிகளை அகற்றியதாக அப்பகுதியில் உள்ள 8 கடற்கரை கிராம பங்கு தந்தையர் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த நிலையில் இன்று தூத்தூர் யூதா கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கோஷங்கள் எழுப்பினர்.கல்லூரி முன்பு நடந்த போராட்டத்தின் போது மாணவர்கள் கைகளில் பாதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். இக்காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் பரவின. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

Tags :

Share via