பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியை போலீசில் சரண்

திருச்சி மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியை சரணடைந்துள்ளார். மாணவி ஒருவருக்கு தலைமை ஆசிரியையின் கணவர் வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் தனியார் பள்ளியை சூறையாடினர். ஏற்கனவே பள்ளி அறங்காவலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி போலீசில் தற்போது சரணடைந்தார்.
Tags :