இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி உலக யோகா தின விழிப்புணர்வு பேரணி.

by Editor / 18-06-2022 02:05:01pm
இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி உலக யோகா தின விழிப்புணர்வு பேரணி.

    இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.பள்ளி கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் செயலர் காந்திமதி மோகன கிருஷ்ணன் தலைமைத் தாங்கினர்.முதல்வர் வனிதா மற்றும் துணை முதல்வர் கிஃப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனர். காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த யோகா பேரணியை  துணை காவல் ஆய்வாளர் செல்வி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாணவர்கள் பாட்டு, நடனம், யோகா உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தினர்.  காவலர்கள் மற்றும் பொதுமக்கள் யோகா விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். உலக யோகா தின விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு பள்ளி கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன் செயலர் காந்திமதி மோகன கிருஷ்ணன் மற்றும் முதல்வர் வனிதா ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 

Tags :

Share via