மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகிறார் சுவேந்து அதிகாரி
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள இவர், நாளை (மே 9) முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து அவர் இன்று ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். இதன் மூலம் வங்கத்தில் 15 கால திரிணாமுல் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
Tags :


















