லஞ்சம் வாங்கிய கணவர்; ஜெய்ப்பூர் மேயர் சஸ்பெண்ட்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஹெரிடேஜ் முனிசிபல் கார்ப்பரேஷன் மேயரை சஸ்பெண்ட் செய்துள்ளது. லஞ்ச வழக்கில் மேயர் முனேஷ் குர்ஜார் கணவர் கைது செய்யப்பட்டவுடன் அவரை பதவி நீக்கம் செய்து அசோக் கெலாட் அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான உத்தரவு சனிக்கிழமை இரவு வெளியானது. நில ஆவணங்கள் ஒதுக்கீடு தொடர்பாக முனேஷின் கணவர் லஞ்சம் கேட்டுள்ளார். தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான அரசியல் சதியின் ஒரு பகுதியாக தனது கணவர் கைது செய்யப்பட்டதாக குர்ஜார் குற்றம் சாட்டினார். லஞ்ச வழக்கில் முனேஷ் குர்ஜாரின் கணவர் சுஷில் குர்ஜார் லஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :