ஓடும் பஸ்ஸில் பெண் வெட்டிக்கொலை

by Staff / 08-04-2023 11:30:13am
ஓடும் பஸ்ஸில் பெண் வெட்டிக்கொலை

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அடுத்த கணவாய்பட்டி பங்களாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபியின் மனைவி தமயந்தி. கோபிக்கும், அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லுக்கு வழக்கறிஞரை சந்திக்க தமயந்தி நேற்று முன்தினம் தனியார் பேருந்தில் சென்றார். அதே பேருந்தில் ஏறிய கோபியின் சகோதரர் ராஜாங்கம், தமயந்தியை கொடூரமாக வெட்டிக் கொன்றார். ஓடும் பேருந்தில் நடந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தப்பியோடிய ராஜாங்கத்தை சம்பவம் நடந்த 20 மணி நேரத்தில் கைது செய்தனர்.

 

Tags :

Share via