புதிய பைக்கிற்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்த இளைஞர்

by Staff / 24-04-2023 04:37:02pm
புதிய பைக்கிற்கு  பெட்ரோல் ஊற்றி  தீவைத்த இளைஞர்

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ஒருவர் தனது பைக்கில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். கஜுவாலா பைக் ஏஜென்சியில் ஒருவர் இருசக்கர வாகனம் வாங்கினார். ஆனால், சில நாட்களில் பைக் பழுதாகிவிட்டதால் அதிருப்தி அடைந்த வாலிபர், இதுகுறித்து அந்த ஏஜென்சியிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அவர்கள் முறையாக பதில் தெரிவிக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர் ஏஜென்சியின் முன்பே பைக்கை தீ வைத்து எரித்தார். இதனால் பைக் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via