மணமகன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலி

by Staff / 24-04-2023 04:38:54pm
மணமகன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலி

சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்ரிதர் பாகேல் என்ற நபர் கடந்த ஏழு வருடங்களாக ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். பின்னர் அவரை பிரிந்த நிலையில், ஏப்.19 அன்று தம்ரிதருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இதையறிந்த தம்ரிதரின் முன்னாள் காதலி கோபத்துடன் திருமண மண்டபத்திற்கு சென்றார். அங்கு மின்தடை ஏற்பட்டதை பயன்படுத்தி இளம்பெண், தான் கொண்டுவந்த ஆசிட்டை மணமக்கள் மீது ஊற்றிவிட்டு தப்பினர். இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். மணமகனின் மீது முன்னாள் காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via