கோவில்பட்டியில் ரெம்டெசிவிர் பறிமுதல்: 2 பேர் கைது

by Editor / 14-05-2021 08:33:33pm
கோவில்பட்டியில் ரெம்டெசிவிர் பறிமுதல்: 2 பேர் கைது

 

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரெம்டெசிவிர் மருந்து 42 குப்பிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காந்தி நகரைச் சேர்ந்த சண்முகம், அவது சகோதர் கணேசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொரோனா பரவல் அதிகரித்துவருவதை அடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மறுபுறம் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து டாக்டர்களால் பரிந்துரையின் பேரில் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. ஆங்கங்கே கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருபவர்கள் கைது செய்யபட்டு வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் மேட்டுகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் செயல்படும் மொத்து மருந்து விற்பனை கடை ஒன்றில் ரெம்டெசிவிர் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையெடுத்து கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரெம்டெசிவிர் மருந்து 42 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து, அந்த மருந்துகளை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர் காந்திநகரைச் சேர்ந்த சண்முகம், அவரது சகோதரர் கணேசன் இருவரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியத்தில் நெல்லை, மதுரையில் ரூ16 ஆயிர ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கி வந்து 20 ஆயிர ரூபாய்; முதல் 30 ஆயிர ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது,

 

Tags :

Share via