பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சென்னையில் கிறிஸ்தவ சபை ஊழியர்களிடம் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசி, அவர்களை மிரட்டிய பாஜக பிரமுகர் பிச்சாண்டி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவாலய ஊழியர் யோவான் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலுக்காக திமுக, அதிமுக, நாதக, பாஜக என பல கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.
Tags :