சுத்தியலால் அடித்து இளம்பெண் கொலை: கொத்தனார் கைது

by Staff / 03-04-2024 12:13:20pm
சுத்தியலால் அடித்து இளம்பெண் கொலை: கொத்தனார் கைது

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர் தனது வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இங்கு, திருவொற்றியூரை சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (40), கட்டிட மேஸ்திரி சந்துரு ஆகியோர், கடந்த 29ஆம் தேதி பணியில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சரண்யா (30), சித்தாள் வேலை செய்துள்ளார். மாலையில், பணி முடிந்த பிறகு கொத்தனார் வேல்முருகன், தன்னுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். அவரை சரண்யா எச்சரித்ததால், இதனால் அச்சமடைந்த வேல்முருகன், சுத்தியலை எடுத்து சரண்யாவின் பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.இதில் சரண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே வேல்முருகன் அங்கிருந்து ஒன்றும் தெரியாதபடி தப்பியோடிவிட்டார். பிறகு வீட்டின் உரிமையாளர் வந்த போது, சரண்யா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே சரண்யா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

Tags :

Share via