அஸ்வமேத யாகமும் ராமன் -சீதாதேவி திருமணமும்.
அஸ்வமேத யாகமும் ராமன் -சீதாதேவி திருமணமும்.
விஸ்வாமித்ரருடன் தங்கியிருந்த ராமனும் இலக்குவனனும் மிதிலாபுரியை ஆண்ட ஜனகன் யாகம் ஒன்றை நடத்துவதாகதகவல் வர..அங்கு சென்றனர்.ஜனகன் கல்வி,கேள்வி,பண்பாடு இவற்றில் சிறந்து விளங்கினார்.அவர் நடத்தும் யாகத்தில்கலந்து கொள்ள அக்கம் பக்கத்திலுள்ள அரசகுமாரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. விஸ்வாமித்ரர் யாகதிதில்கலந்து கொள்ள இருப்பதால் அவருடன் ராமனும் லட்சுமணனும் வரவிருப்பமிருந்தால் வரலாம் என்று கூற..ராமனும் லட்சுமணனும் உடன் வர சம்மதித்தனர்.மகரிஷியின் ஆணைப்படி நடந்து கொள்ளத்தாங்கள் என்றும் ஆயத்தமாயிருப்பதை அவரிடம் ராமன் தெரிவித்தான்.உருவத்தைத்தொடர்ந்து நிழல் வருவதை போல் குருவைப்பின்பற்றிசிஷ்யர்கள் செல்வதுதான் முறை என்றும் அவன் இயம்பினான்.ஆஸ்ரமத்தின் திருக்கூட்டம் புறப்பட்டுச்சென்றது.மிதிலாபுரியில் யாகம் செய்வதற்கான மிகப்பரந்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விருந்தினர் வருகைக்காகவும் அவரவர் அந்தஸ்திற்கேற்ப குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.விஸ்வாமித்ரர் தம் சீடர்களுடன் யாகத்தில் கலந்து கொண்டடாா்.
Tags :