by Staff /
09-05-2023
04:08:53pm
கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.துவல்தீரம் பகுதியில் சுமார் 40 பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகு நேற்று மாலை 6.30 மணியளவில் எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 22 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் 2 ஆவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தனூரைச் சேர்ந்த படகு உரிமையாளர் நாசர் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவரது உறவினர்கள் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Tags :
Share via