ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் உறவினர்கள் சாலை மறியல்.

by Staff / 18-10-2023 12:50:14pm
ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் உறவினர்கள் சாலை மறியல்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி  அருகே உள்ளது ரெங்கபாளையம் கிராமம். இக்கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கனிஷ்கர் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையின் வளாகத்திலேயே பட்டாசு கடை ஒன்றும் இயங்கி வருகிறது. தற்போது தீபாவளிக்கு  ஒரு சில தினங்களே உள்ள நிலையில் ஃபேன்சி ரக பட்டாசுகள் மற்றும் சிறிய பட்டாசுகளை கொண்டு கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணி பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள குடோனில் நடைபெற்று வந்துள்ளது. 


அவ்வாறு பேக்கிங் செய்து கொண்டிருக்கையில் கிப்ட் பாக்ஸ் வெடிகளை சோதனை செய்வதற்காக அதிலிருந்து ஒரு வெடியை எடுத்து ஆலை வளாகத்திலேயே சோதித்து பார்த்துள்ளனர். அப்போது  வெடித்து சிதறிய பட்டாசு எதிர்பாராத விதமாக கிப்ட் பாக்ஸ் பேக்கிங் செய்யும் இடத்தில் விழுந்தது. இதனால் பேக்கிங் செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியது.இதில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பெண் ஒரு ஆண் என 13 பேர் உடல் கருகிய நிலையில்  மீட்கப்பட்டனர். இந்த விபத்து ஆலை உரிமையாளா சுந்தரமூர்த்தி, மேற்பார்வையாளர் கனகராஜ் ,மேலாளர் ராம்குமார் ஆகிய மூவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த எம்.புதுப்பட்டி போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த பட்டாசு வெடிவிபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆண் ஐந்து பெண் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி போதாது எனவும் கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும் எனவும், உயிரிழந்த குடும்பம் ஏழ்மை குடும்பம் எனவும் வீட்டில் சிறு குழந்தைகள் உள்ளதாகவும் எனவே அவர் குடும்ப சூழ்நிலை கருத்தில் உண்டு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும்,பட்டாசு ஆலை முன்பு பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஏராளமான பொதுமக்கள் அழகாபுரி கிராமத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஏதும் நிகழாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via