ரூ 15.5 கோடி பதுக்கல் ரூபாய் 4.5 கோடி கமிஷன் என மோசடியில் ஏமாந்த இளைஞர்

by Editor / 18-06-2022 01:01:04pm
ரூ 15.5 கோடி பதுக்கல் ரூபாய் 4.5 கோடி கமிஷன் என மோசடியில் ஏமாந்த இளைஞர்

அமெரிக்க இராணுவம் தந்த பணத்தை பினாமி போல் பாதுகாத்தால் நான்கரை கோடி ரூபாய் கமிஷன் தருவதாகக் கூறி இளைஞரிடம் 36 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி லட்சுமிபுரத்தில் சேர்ந்த முருகானந்தத்தை பேஸ்புக் மூலம் தொடர்புகொண்ட ஏமிலி ஜோன்ஸ் என்பவர் தான் அமெரிக்க ராணுவத்தில் செவிலியராக பணியாற்றுவதாக சிரியா போர் மூலம் கிடைத்த 15,000 கோடி ரூபாய் பணத்தை பாதுகாக்க நம்பிக்கையான ஆள் வேண்டும் என்று அதற்கு நான்கரை கோடி ரூபாய் கமிஷன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது. நான்கரை கோடி ரூபாய் எதிர்பார்த்த முருகானந்தத்தை பல்வேறு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் சுங்கத்துறை வரி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை கூறி பல வங்கி கணக்குகள் மூலம் 36 லட்சம் முப்பத்தி ஒரு ஆயிரம் ரூபாய் வரை கறந்ததாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்படுவதை தாமதமாக அறிந்த முருகானந்தம் அளித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via