பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் பதினொரு வயது சிறுவன் படுகாயம்
உத்தரபிரதேசத்தில் பிட்புல் நாய் கடித்து குதறியதில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் நாயின் உரிமையாளர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காசியாபாத்தில் வீட்டின் அருகே பூங்காவில் 11 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது பெண்ணுடன் நடைப்பயிற்சிக்கு வந்த பிட்புல் நாய் திடீரென சிறுவனை தாக்கிய கடித்து குதறியது. முகம் முழுவதும் காயமடைந்த சரவணன் 200 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் உரிமம் மற்றும் பதிவு இல்லாமல் செல்லப்பிராணிகளை வளர்த்த உரிமையாளருக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Tags :