பஞ்சாப் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி

by Admin / 30-04-2023 08:59:11pm
பஞ்சாப் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி

இன்று சென்னை எம்.ஏ.சி கிரிக்கெட் மைதானத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற  சென்னைஅணி பேட்டிங்கை தேர்வு செய்தது களத்தில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளையும் இழந்து இருநூறு ரன்களை எடுத்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி. கடுமையாக போராடி 20 ஓவரில் 202ரன்களை எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. கருத்துக் கணிப்பின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் 95 விழுக்காடு வெற்றி பெறும் என்கிற நிலையை உடைத்து, பஞ்சாப் அணி  தவிடு பொடியாக்கியதோடு, கடைசி  மூன்று ரன்களுக்கு ஒரு பந்து என்கிற நிலையில் எந்த பக்கம் வெற்றி வரும் என்கிற நிலை ரசிகர்களை தொற்றிக் கொண்டிருந்த பொழுது..... ஒரு பந்தில் மூன்று ரன்களை ஓடி எடுத்து தங்களுடைய அணியை பஞ்சாப் வீரர்கள் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்கள். சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.

 அடுத்த போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களத்தில் இறங்கி விளையாட உள்ளது. இது ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மாவினுடைய பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது எ ட்டு ஐ பி எல் போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த ஐ.பி.எல் இப்பொழுது பத்து போட்டியாளர்களைக் கொண்டு ஆயிரமாவது போட்டியை இன்று மும்பையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

பஞ்சாப் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி
 

Tags :

Share via