மின்சார துறை வாரிய விஜிலன்ஸ் டிஜிபி விருப்ப ஓய்வு

by Staff / 01-10-2023 04:41:23pm
மின்சார துறை வாரிய விஜிலன்ஸ் டிஜிபி விருப்ப ஓய்வு

மின்சார துறை வாரிய விஜிலன்ஸ் டிஜிபி பி.கே.ரவி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக விஜிலன்ஸ் டிஜிபியாக பணிபுரிந்து வந்த பி.கே.ரவி நேற்று விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். 1989ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த இவர், அரசியலில் ஈடுபடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுன் மாதம் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற நிலையில், புதிய டிஜிபி பதவிக்கு பி.கே.ரவியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் சங்கர் ஜிவால் காவல்துறை தலைவரானார்.

 

Tags :

Share via