பட்டாசு ஆலை விபத்து - 2 பேர் கைது

by Staff / 04-10-2023 11:57:04am
பட்டாசு ஆலை விபத்து - 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று பட்டாசு ஆலை விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி கங்கர்செவல் கிராமத்தில் உள்ள விக்டோரியா பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், ஆலை ஊழியர்கள் முத்தம்மாள், கணேசன், ராஜா ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலையின் உரிமையாளர் ராஜேந்திர ராஜா, ஆலை போர்மேன் சக்கையா ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via