குழந்தைகளை கூண்டில் அடைத்து வைத்த பயங்கரவாதிகள்

by Staff / 09-10-2023 11:06:24am
குழந்தைகளை கூண்டில் அடைத்து வைத்த பயங்கரவாதிகள்

பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது சனிக்கிழமை போர் தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள் மற்றும் பெண்களும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். சில பெண்களை பிடித்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே, குழந்தைகள் விலங்குகள் போல் கூண்டுகளில் அடைக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். போர் காரணமாக இரு நாடுகளிலும் இதுவரை 1100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via