அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட மாயனூர் புதுதெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து வயது 37. இவர் நவம்பர் 5ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கரூர்- திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் மாயனூர் கே. சி. பி். மில் அருகே சென்றபோது, அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாரிமுத்து டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் அறிந்த மாரிமுத்துவின் மனைவி பரமேஸ்வரி வயது 35 என்பவர், இது குறித்து மாயனூர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மாரிமுத்துவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக நவம்பர் 6ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.
Tags :